Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தும் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூலை 23, 2024 01:18 AM


Google News
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்-களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பய-ணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், துறையூர், பெரம்பலுார், சென்னை, மணப்பாறை, திண்டுக்கல் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கும், முசிறி, பெட்ட-வாய்த்தலை, தோகைமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகு-திகளுக்கும், அரசு, தனியார் என, 500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை நிறுத்துவதற்கென தனித்-தனி, 'ரேம்ப்' வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கண் கண்ட இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் கார-ணமாக, குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்லும் பஸ்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கின்றன. மேலும், குளித்தலை மெயின் சாலை பகுதியில் பஸ்களை அணி-வகுத்து நிறுத்தி வைப்பதால், சாலை பகுதியிலும் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பஸ்-களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்-துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us