/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
மாயமான முதியவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 03:00 AM
கரூர்: வெள்ளியணை அருகே, காணாமல் போன முதி-யவரின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
கரூர் மாவட்டம், வெள்ளியணை தெற்கு மேட்-டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியன், 70; இவர் கடந்த, 30ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, முனியனின் மகள் காளியம்மாள், 46, போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தங்கராஜ் என்பவ-ரது விவசாய தோட்ட கிணற்றில், முனியனின் உடல்
மீட்கப்பட்டது.
முனியன் கிணற்றில், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.