Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

சிவனடியார் ஆண்டு விழாவில் நாயன்மார்கள் திருவீதி உலா

ADDED : ஜூலை 21, 2024 02:50 AM


Google News
கரூர்;கரூர் சிவனடியார் திருக்கூட்ட, 29வது ஆண்டு விழா மற்றும் 63 நாயன்மார்களின், 28வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது.

பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, 63 நாயன்மார்கள் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அலங்கரிப்பட்ட தேரில், 63 நாயன்மார்களின் திருவீதி உலா, திருமுறை இன்னிசையுடன் நடந்தது.

இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை சிவனடியார் திருக்கூட்ட ஆண்டு விழா நடக்கிறது. அதில், பெரிய புராணம் என்ற தலைப்பில் பேராசிரியர் மாணிக்கவாசகம், ஸ்ரீ குமர குருபர சுவாமிகளின் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் பேராசிரியர் பனசை மூர்த்தி உள்பட பலர், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை ஓதுவார் மூர்த்தி ஜெகநாதனின், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us