/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜை
ADDED : ஜூலை 20, 2024 02:25 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, ராஜேந்திரத்தில் காளியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன.
இரண்டு அம்மன்களுக்கும், தங்கத்தில் மாங்கல்யம் அணிவிப்பதற்காக கிராம மக்கள், விழா கமிட்டியினர் முடிவு செய்தனர்.இதையடுத்து, விழா குழுவினர் அனைத்து தரப்பு மக்களிடம் தாலி பிச்சை எடுத்தனர். நேற்று முன்தினம் காலை கிராம மக்கள், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து, மலையாள சுவாமி, மதுரை வீர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.பின், தீர்த்தக்குகுடத்தில் உள்ள நீரை அம்மனுக்கு ஊற்றி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்று மாலை காளியம்மன், மாரியம்மன் கரகம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.நேற்று காலை கோவில் மண்டபத்தில் ராஜேந்திரம் பேராசிரியர் பாலச்சந்தர், தொழிலதிபர் சகாதேவன் ஆகியோர் தலைமையில், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் சிறப்பு யாக பூஜை செய்து. புனிதநீர் கும்பத்தில் மாங்கல்யம் வைத்து பூஜை செய்தனர்.பின்னர், மாரியம்மன், காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு அம்மனுக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.ராஜேந்திரம், மருதுார், தண்ணீர்பள்ளி, மேட்டுமருதுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.