/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் துண்டு துண்டாக வெட்டி நிதி நிறுவன ஊழியர் படுகொலை கரூரில் துண்டு துண்டாக வெட்டி நிதி நிறுவன ஊழியர் படுகொலை
கரூரில் துண்டு துண்டாக வெட்டி நிதி நிறுவன ஊழியர் படுகொலை
கரூரில் துண்டு துண்டாக வெட்டி நிதி நிறுவன ஊழியர் படுகொலை
கரூரில் துண்டு துண்டாக வெட்டி நிதி நிறுவன ஊழியர் படுகொலை
ADDED : ஜூலை 29, 2024 01:44 AM
கரூர்: கரூர் அருகே, நிதி நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கொன்றது, பலத்த அதிர்ச்சியை ஏற்டுத்தியது.
கரூர் மாவட்டம் காந்தி கிராமம், கம்பன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஜீவா, 19; திருப்பூர் தனியார் நிதி நிறுவன ஊழியர். கடந்த, 22ல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர் மாயமானார். ஜீவாவின் தாய் சுந்தரவள்ளி புகார்படி, தான்தோன்-றிமலை போலீசார் விசாரித்தனர்.
ஜீவா மொபைல் போன் சிக்னல் கடைசியாக, கரூர் - திருச்சி பழைய சாலை, தொழிற்பேட்டை பகுதியில், 'சுவிட்ச் ஆப்' செய்-யப்பட்டது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் சோதனையில் ஈடு-பட்டனர். தொழிற்பேட்டையின் பழைய கட்டடத்துக்கு பின்பகு-தியில், முட்புதருக்குள் குழி தோண்டப்பட்ட அடையாளம் இருந்-தது.
சுதாரித்த போலீசார், கரூர் தாசில்தார் குமரேசன், டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் முன்னிலையில், அந்த இடத்தில் நேற்று மண்ணை தோண்டினர். அப்போது ஆறு துண்டுகளாக வெட்டப்-பட்டு புதைக்கப்பட்ட ஜீவா உடலை கண்டுபிடித்தனர். இந்நி-லையில் கொலை தொடர்பாக, காந்தி கிராமம் இ.பி.காலனியை சேர்ந்த சசிக்குமார், 35, உள்பட, ஆறு பேரை, பசுபதிபாளையம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கடந்த, 2021ல் கிருஷ்ணமூர்த்தி என்பவர், அவரது நண்பர்க-ளான சசிக்குமார், மோகன் ஆகியோரை மேலப்பாளையம் அமரா-வதி ஆற்றுக்கு அழைத்து சென்று, முன் விரோதம் காரணமாக, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதில் மோகன் இறந்தார். இதில் சிறை சென்ற கிருஷ்ணமூர்த்தி, தற்போது ஜாமினில் உள்ளார். சசிக்குமார் மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். மோகனை கொலை செய்ய ஜீவா தான் திட்டம் போட்டு தந்துள்ளார்.
மேலும் சசிக்குமார் படத்தை, 'இன்ஸ்டாகிராமில்' போட்டு, முகத்தை சிதைத்து விடுவதாக, ஜீவா பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிக்குமார், விடுமுறையில் ஊருக்கு வந்த ஜீவாவை வெட்டி கொலை செய்து புதைத்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.