Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

ADDED : ஜூன் 17, 2024 01:32 AM


Google News
கரூர்: குப்பகவுண்டன்வலசு பகுதியில், பருவ மழை இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், கிணறுகளை ஆழப்படுத்ததும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் பெரும்பாலும் பருவமழையை நம்பி விவசாயத்தை மட்டுமே செய்து வருகின்றனர். அஞ்சூர் பஞ்., குப்பகவுண்டன் வலசு சுற்று பகுதியில், பருவ மழை காலங்களில் கிணற்று நீர் மட்டம் உயர்ந்தால்தான் சாகுபடி மேற்கொள்ள முடியும். பருவ மழை போதிய அளவு பெய்யாததால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் சற்று கீழே போனதால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது.

குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. எந்த சாகுபடியும் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அதல பாதாளத்திற்கு சென்றதால், கிணறுகளை ஆழப்

படுத்தும் பணியில் விவசாயிகள்

ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us