/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மதுவிலக்கை அமல்படுத்த கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம் மதுவிலக்கை அமல்படுத்த கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கை அமல்படுத்த கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கை அமல்படுத்த கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
மதுவிலக்கை அமல்படுத்த கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 11:29 AM
அரவக்குறிச்சி: தமிழகத்தில், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சின்னதாராபுரம் பஸ் நிறுத்தம் அருகே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை ஆண்டிற்கு, 2.5 லட்சம் கோடியாக உயர்த்தனும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட, 64 பேரின் மரணத்திற்கு பொறுப்பேற்று டாஸ்மாக் கடைகளை மூடி, முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.