ADDED : செப் 18, 2025 02:18 AM
கரூர் :கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை, சின்ன ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில், கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது.
கரூரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், குப்பைகள் நனைந்து அழுகும் நிலையில் உள்ளது. எனவே, சர்வீஸ் சாலையில், தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற, நட வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.