/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை தாசில்தார் ஆபீசில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் குளித்தலை தாசில்தார் ஆபீசில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
குளித்தலை தாசில்தார் ஆபீசில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
குளித்தலை தாசில்தார் ஆபீசில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
குளித்தலை தாசில்தார் ஆபீசில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஜூலை 14, 2024 02:31 AM
குளித்தலை: குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது-காப்பு திட்டம் சார்பில், ரேஷன் குறைதீர் முகாம் நடந்தது. டி.எஸ்.ஓ., ஜெயவேல் காந்தன் தலைமை வகித்து, மக்களிடமி-ருந்து குடும்ப அட்டை சம்பந்தமான கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆர்.ஐ., விஜய் ஆனந்த், உதவியாளர் அதியமான், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் வருவாய்துறையினர், அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை என, பல்வேறு வகையில் மனுக்கள் பெறப்-பட்டன.