Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

தி.மு.க., டவுன் பஞ்., பெண் தலைவர் மீது தாக்குதல்: 2 பேர் மீது போலீசார் வழக்கு

ADDED : ஜூலை 23, 2024 01:38 AM


Google News
கரூர் : கரூர் அருகே, தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவரை தாக்கிய தாக, டவுன் பஞ்., அலுவலக உதவியாளர் உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 44; பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் டவுன் பஞ்.,சில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர், உப்பிடமங்கலம் வடக்கு கேட் பகுதியில், அரசுக்கு சொந்-தமான நிலத்தில் வீடு கட்டி வருவதாக புகார் எழுந்தது. இதனால், விளக்கம் கேட்டு உப்பிடமங்கலம் பஞ்., நிர்வாகம் சார்பில், சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நி-லையில், தி.மு.க.,வை சேர்ந்த உப்பிடமங்கலம் டவுன் பஞ்., தலைவர் திவ்யா, 32; அவரது கணவரான, உப்பிடமங்கலம் பேரூர் தி.மு.க., செயலாளர் தங்கராஜ், 38, ஆகியோர் கடந்த, 20ல் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் நின்று கொண்டிருந்-தனர். அப்போது, அங்கு சென்ற சிவக்குமார், அவரது நண்பர் பிர-பாகரன், 42; ஆகியோர், தங்கராஜூடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். அதில், நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்-டது.

பிறகு, டவுன் பஞ்., தலைவர் திவ்யா கொடுத்த புகாரின்படி, சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us