Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூரில் சிறு பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : ஜூலை 06, 2024 01:10 AM


Google News
கரூர், : கரூரில், சாலையின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலத்தில் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்-றனர்.

கரூர் வடக்கு லட்சுமிபுரத்தில், நாரத கான சபா அருகில், சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்-பட்டுள்ளது. தற்போது, சிறுபாலத்தின் மேல் பகுதியில் சேதம் அடைந்துள்ளது.

மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகி-றது. அப்போது, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us