Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

ADDED : மார் 27, 2025 01:41 AM


Google News
கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் உப்பாறு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 36, கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள், திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 இரவு 8:30 மணியளவில் தனது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அவர், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us