Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை

அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை

அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை

அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை

ADDED : மார் 23, 2025 12:59 AM


Google News
அங்கன்வாடி மையத்திற்குபுதிய கட்டடம் தேவை

அரவக்குறிச்சி:மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்த அங்கன்வாடி மையத்தை, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் குடியிருப்பில் நடத்துவதால், சொந்த கட்டடத்திற்கு மாற்ற பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு வடக்கு தெருவில் கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை சுற்றி ஒரு கி.மீ., தொலைவில் உள்ள குழந்தைகள் தொடக்க கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அங்கன்வாடி மையம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சொந்த கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்ததால், தனியார் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தை தற்காலிக இடமாற்றம் செய்தனர்.

ஆனால், தற்போது வரை அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவில்லை. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடக்கக்கல்வி பயிலும், அங்கன்வாடி மையத்தை விரைவில் சீரமைத்து சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us