ADDED : ஜூன் 22, 2024 12:48 AM
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கட்டளை அருகே மேல மாயனுார் முதல், மாயனுார் கதவணை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த வழியாக நாள் தோறும், ஏராளமான வாகனங்கள் செல்கிறது. மேலும், கட்டளையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமானோர் கரூருக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மேல மாயனுார் முதல் மாயனுார் கதவணை வரை, புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.