Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

ADDED : மார் 25, 2025 01:03 AM


Google News
காணியாளம்பட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

கரூர்:காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில், நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மைலம்பட்டி அருகில், காணியாளம்பட்டி பஞ்., அலுவலக வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட நாள் முகாம் நிறைவு விழா நாளை (26ம் தேதி) காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி, பொதுமக்களிடம் கூறுவர். பின், மருத்துவ முகாம், அரசுத்

துறைகள் சார்பில் கண்காட்சி நடக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us