Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

UPDATED : ஜூலை 04, 2024 10:40 AMADDED : ஜூலை 02, 2024 06:41 AM


Google News
கரூர் : சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 13 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எஸ்.ஐ., மகாமுனி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, சி. கூடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக சிவன்மலை, 50; மோகன், 39; பாலசுப்பிர மணி, 38; ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப், 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்த, 13 டூவீலர்கள், 3,000 ரூபாயையும் சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us