Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சத்துணவு மற்றும் அங்கன்வாடிஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடிஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடிஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடிஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 15, 2025 02:12 AM


Google News
சத்துணவு மற்றும் அங்கன்வாடிஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், 2025-26 நிதிநிலை அறிக்கையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவது போல, 6,750 ரூபாய், அகவிலைப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் தனபாக்கியம், முன்னாள் மாநில துணைத் தலைவர் மகாவிஷ்ணன், மாவட்ட செயலாளர் சிங்கராயர், பொருளாளர் சுப்புலட்சுமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us