Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி

ADDED : ஜூன் 28, 2025 06:50 AM


Google News
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக்கில் பயணித்த நண்பர்கள் இருவர் நான்கு வழி சாலை மீடியனில் மோதி பலியாயினர்.

நாகர்கோவில் அருகே பறக்கை ரோட்டை சேர்ந்தவர் ரெயான் முகமது 20. இவரது நண்பர் வடக்கு சூரன் குடியைச் சேர்ந்த ஷபான்சிராஜ் 20. டிப்ளமோ முடித்திருந்தனர். நேற்று அதிகாலை 2:00 மணியளவில் இருவரும் பைக்கில் காவல்கிணறில் இருந்து நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருப்பதிசாரம் டோல்கேட் அடுத்து திருப்பதிசாரம் திருப்பத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், நான்குவழிச்சாலையில் மீடியனில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து பலியாயினர். ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us