/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ போதை டிரைவரால் விபரீதம்; ஜே.சி.பி., மோதி 2 பேர் பலி போதை டிரைவரால் விபரீதம்; ஜே.சி.பி., மோதி 2 பேர் பலி
போதை டிரைவரால் விபரீதம்; ஜே.சி.பி., மோதி 2 பேர் பலி
போதை டிரைவரால் விபரீதம்; ஜே.சி.பி., மோதி 2 பேர் பலி
போதை டிரைவரால் விபரீதம்; ஜே.சி.பி., மோதி 2 பேர் பலி
ADDED : செப் 13, 2025 06:11 AM
நாகர்கோவில : கன்னியாகுமரி ரயில் நிலைய ரோட்டில் குடிபோதையில் டிரைவர் ஓட்டி வந்த ஜே.சி.பி., வாகனம் மோதி இரண்டு பேர் இறந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி ரயில் நிலைய முன்புறமுள்ள ரோட்டில் நேற்று மாலை ஒரு ஜே.சி.பி., இயந்திரம் வந்து கொண்டிருந்தது. அது திடீரென தாறுமாறாக ஓடியதால் ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதியது. இதில், இரண்டு பேர் இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் கன்னியாகுமரி பேரூராட்சி தமிழக வெற்றி கழக நிர்வாகி முகமது ஷான் 35, என்பதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த கேட்டரிங் கல்லுாரி மாணவர் சபரி கிரி, 17, என்பதும் தெரியவந்தது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜே.சி.பி., இயந்திரத்தை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடியை சேர்ந்த கணபதியை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டு, ஜே.சி.பி., பறிமுதல் செய்யப்பட்டது.