Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பெண்ணின் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா: ராணுவவீரர் கைது

பெண்ணின் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா: ராணுவவீரர் கைது

பெண்ணின் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா: ராணுவவீரர் கைது

பெண்ணின் வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா: ராணுவவீரர் கைது

ADDED : மே 18, 2025 04:48 AM


Google News
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுமனை புகுவிழா அழைப்பின்பேரில் சென்று வீட்டு குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை படம் எடுத்து இரண்டு ஆண்டுகளாக பார்த்து வந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் அப்பகுதியில் வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். திருமணமாகி கணவன், இரு குழந்தைகள் உள்ளனர்.

வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மது ராஜா 35. இவர் மிசோரம் மாநிலத்தில் ராணுவ ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் உறவினர்கள். விடுமுறையில் மது ராஜா வரும்போதெல்லாம் அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். 2003-ல் அந்த பெண் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார்.

இதற்கு அழைத்ததன்பேரில் சென்ற மது ராஜா புதிய வீட்டில் உள்ள குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தினார். பின் அவர் மிசோரம் மாநிலத்திற்கு பணிக்கு சென்றார்.

அங்கு இருந்தபடி அந்த பெண்ணின் வீட்டு குளியலறையில் இருந்த கேமரா மூலம் அலைபேசியில் அவர் குளிப்பதை பார்த்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் மது ராஜா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் அந்த படங்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அதிர்ச்சி அடைந்த பெண் மது ராஜா மீது ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில் மது ராஜா ரகசியமாக கேமரா பொருத்தியது தெரிந்தது. மது ராஜாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us