Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ பிரிந்து வாழும் மனைவி மகளை காரில் சேசிங் செய்த கணவர்

பிரிந்து வாழும் மனைவி மகளை காரில் சேசிங் செய்த கணவர்

பிரிந்து வாழும் மனைவி மகளை காரில் சேசிங் செய்த கணவர்

பிரிந்து வாழும் மனைவி மகளை காரில் சேசிங் செய்த கணவர்

ADDED : ஜூன் 25, 2025 02:30 AM


Google News
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பிரிந்து வாழும் மனைவி , மகள் சென்ற காரை சேஸ் செய்து மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குளச்சல் அருகே சாஸ்தான்கரையைச் சேர்ந்தவர் முகமது அப்துல் காதர் 47. முன்னாள் கவுன்சிலர். ரியல் எஸ்டேட் புரோக்கர். மனைவி சரபு நிஷா 43. இவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன், மகள்களை துன்புறுத்தியதால் மனைவி சரபு நிஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் முகமது அப்துல் காதர் பிரிந்து வாழ்கிறார். சரபு நிஷா மகன், மகள்களுடன் சென்னையில் சகோதரர் வீட்டில் வசிக்கிறார்.

ஒரு மகள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதால் சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக மாற்றுச்சான்றிதழ் வாங்க மகன் மற்றும் சகோதரனுடன் வாடகை காரில் கல்லூரிக்கு சரபு நிஷா சென்று கொண்டிருந்தார்.

இதை அறிந்த முகமது அப்துல் காதர் 3 பேரை அழைத்துக் கொண்டு மற்றொரு காரில் மனைவி மகள் சென்ற காரை பின் தொடர்ந்தார். சினிமா படப்பாணியில் துரத்திய போது மனைவி மகள் சென்ற காரின் மீது பலமுறை மோதி அச்சுறுத்தினார். இந்த நிலையில் அவரது காரின் முன் சக்கரம் பஞ்சரானதால் காரை நிறுத்தி விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து சரபு நிஷா குளச்சல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் முகமது அப்துல் காதர் உட்பட 4 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரும் தலைமறைவாகினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us