Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

கடல் நீர்மட்டம் குறைந்து படகு சேவை பாதிப்பு

ADDED : ஜூலை 09, 2024 12:10 AM


Google News
நாகர்கோவில் : கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம், தன் படகுகளில் சுற்றுலா பயணியரை அழைத்துச் செல்கிறது. வழக்கமாக காலை 8:00 மணிக்கு படகு போக்குவரத்து துவங்கி, மாலை 4:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

கடந்த இரண்டு நாட்களாக, கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. காலை நேரத்தில் கடல்நீர் குறைந்து, பாறைகள் வெளியே தெரிந்தன. காலை 10:00 மணிக்கு பின், நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து, படகு இயக்கும் அளவுக்கு நிலைமை சீராகிறது. அதன் பின், படகு போக்குவரத்து நடக்கிறது.

இந்நிலை நேற்றும் நேற்று முன்தினமும் இருந்தது. இதனால், காலை 8:00 மணிக்கு துவங்க வேண்டிய படகு போக்குவரத்து, காலை 10:00 மணிக்கு பின்னரே துவங்கியது. படகில் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக, அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். பொதுவாக, அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடலில் ஏற்படும் இயல்பான மாற்றம் தான் இது என்று, இங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us