Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

ADDED : ஜூன் 09, 2025 03:23 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த குன்னவலம் பகுதியை சேர்ந்தவர் காவியா, 32. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது.

ஒன்பது வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் 2019-ம் ஆண்டு கணவனை பிரிந்து மகனுடன் குன்னவலம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் காவியா குன்னவலம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 34, என்பவருடன் பழகி சென்னை வியாசர்பாடியில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

ஏழு மாத கர்ப்பமான காவியாவை ரவீந்திரன் கை விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து குன்னவலத்தில் வாழ்ந்து வந்தார்.

இதுகுறித்து காவியா மே மாதம் 13-ல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நேற்று ரவீந்திரனை கைது செய்த, மகளிர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us