Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ADDED : ஜூன் 06, 2025 02:15 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

திருநங்கைகளுக்கு தொழில் துவங்க நிதியுதவி, ஓய்வூதியம், தேசிய அடையாள அட்டை, 55 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 48 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட 247 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us