Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வாலாஜாபாத் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வாலாஜாபாத் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

வாலாஜாபாத் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

ADDED : ஜூன் 02, 2025 01:17 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து, சில லாரி உரிமையாளர்கள் பிரிந்து, வாலாஜாபாத் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை தோற்றுவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்கத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து, நுகர்பொருள் வாணிப கழகத்தினரின் நெல், அரிசி, கோதுமை ஆகிய உணவுப் பொருட்களை ஏற்றி இறக்கும் பணி செய்து வருகின்றனர்.

இதில், உட்பூசல் நிலவுவதால், காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்கத்தில் இருந்து, வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சிலர் பிரிந்து, வாலாஜாபாத் லாரி உரிமையாளர் சங்கத்தை துவக்கி உள்ளனர்.

இந்த சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று கட்டவாக்கத்தில் நடந்தது.

தலைவராக ஏ.எம்.கண்ணன், செயலராக ராஜா, பொருளாளராக கோவிந்தராஜ் மற்றும் கவுரவ தலைவராக பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us