Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 30, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:வெங்கச்சேரியில் தார்ப்பாய் மூடாமல் எம்.சான்ட் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

உத்திரமேரூர் தாலுகா, மதுார், அருங்குன்றம், சிறுதாமூர், எடமிச்சி ஆகிய பகுதிகளில் கல் குவாரிகள், கிரஷர்கள் இயங்கி வருகின்றன.

இங்கு, வெடிவைத்து தகர்க்கப்படும் பாறைகள் அருகிலுள்ள கிரஷர்களில் உடைக்கப்பட்டு, ஜல்லிகளாகவும், எம். சான்ட் மணலாகவும் வருகின்றன.

இவைகள், லாரி, டிராக்டர் மூலமாக சென்னை, செங்கல்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரி பகுதியில், லாரி மற்றும் டிராக்டர்களில், தொடர்ந்து தார்ப்பாய் மூடாமல் ஜல்லி, எம்.சான்ட் மணல் ஆகியவை ஏற்றிச் செல்லப்படுகின்றன.

அவ்வாறு ஏற்றிச் செல்லும் போது வேகத்தடை பகுதிகளில் ஜல்லி சிதறி, வாகன ஒட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், எம்.சான்ட் மணலை வாகனங்களில் தார்ப்பாய் மூடாமல் ஏற்றிச் செல்லும்போது, அவற்றின் புழுதிகள் காற்றில் பறந்து பின்னே வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.

எனவே, தார்ப்பாய் மூடாமல் ஜல்லிகள், எம்.சான்ட் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us