Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

துார்ந்து கிடக்கும் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : மே 18, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பூந்தோட்ட தெருவில், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

முறையாக பராமரிக்காததால், கால்வாயில் குப்பை மற்றும் மண்திட்டுகளால் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பூந்தோட்ட தெருவில் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us