Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

கோரைப்புற்களால் துார்ந்த கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 25, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
சிறுகாவேரிபாக்கம்:விநாயகபுரத்தில், கோரைப்புற்கள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்து கின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் பெய்யும் மழைநீர், விநாயகபுரம் வழியாக வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் கோரைப்புல், செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்த நிலையில் உள்ளது. மேலும், கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது.

இதனால், மழைநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us