Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 16, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவில், சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெரு வழியாக ஆனந்தாபேட்டை, பாக்ராபேட்டை மின்நகர், திருக்காலிமேடு, ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், லேசான மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில், மழைநீர் தேங்குகின்றன. மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருச்கர வாகன ஓட்வடிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ரெட்டிபேட்டை தெருவில், சேதமடைந்த சாலையை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us