Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் ஓட்டம்

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் ஓட்டம்

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் ஓட்டம்

ஆடு தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் ஓட்டம்

ADDED : ஜன 12, 2024 10:07 PM


Google News
பெரம்பூர்:ஆடு வாங்கி தருவதாக, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர், ஆனந்தவேல் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 55. கடந்த 30 ஆண்டுகளாக, ஆடு வியாபாரம் செய்து வருகிறார். கடந்தாண்டு சையத் ஷக்கீல் என்பவரிடம், ஆடு வாங்க 10 லட்சம் ரூபாயை, அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

ஆனால், இன்று வரை ஆடு வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித்தராமலும் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், செம்பியம் போலீசார் தலைமறைவாக உள்ள சையத் ஷக்கீல், 45, என்பவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us