Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திறந்தவெளி வடிகால்வாயை தாண்டி ரேஷன் கடை செல்ல வேண்டிய அவலம்

 திறந்தவெளி வடிகால்வாயை தாண்டி ரேஷன் கடை செல்ல வேண்டிய அவலம்

 திறந்தவெளி வடிகால்வாயை தாண்டி ரேஷன் கடை செல்ல வேண்டிய அவலம்

 திறந்தவெளி வடிகால்வாயை தாண்டி ரேஷன் கடை செல்ல வேண்டிய அவலம்

ADDED : டிச 01, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்: பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில், திறந்தவெளி வடிகால்வாயை தாண்டி, ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய அவல நிலையில் நுகர்வோர் உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கம் ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள், பெருமாள் கோவில் அருகே உள்ள ரேஷன் கடையில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

ரேஷன் கடையில் எதிரே உள்ள திறந்த வெளி மழைநீர் வடிகால்வாயை கடந்து செல்ல, கான்கிரீட் கால்வாய் சமீபத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், கால்வாய் மீது சிலாப் அமைக்காமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.

இதனால், ரேஷன் கடைக்கு செல்லும் மக்கள், ஆபத்தான நிலையில் கால்வாயை தாண்டி சென்று வருகின்றனர். குறிப்பாக, பெண்கள், வயதானோர், கால்வாயை தாண்டி செல்லும்போது, தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலைக்கு சென்று வருகின்றனர்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி, ரேஷன் கடை செல்லும் வழியில் திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மீது, கான்கிரீட் சிலாப் அமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us