Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் காட்டுக்கொல்லை ரேஷன் கடை

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் காட்டுக்கொல்லை ரேஷன் கடை

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் காட்டுக்கொல்லை ரேஷன் கடை

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் காட்டுக்கொல்லை ரேஷன் கடை

ADDED : ஜூன் 08, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காரியமங்கலம் ஊராட்சியில், காட்டுக்கொல்லை, மேட்டுக்கொல்லை, காரியமங்கலம் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, காட்டுக்கொல்லை கிராமத்தில், சில ஆண்டுகளாக ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 250 குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் உணவு பொருட்கள் பெற்று வருகின்றனர்.

இந்த ரேஷன் கடையில் போதிய இடவசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.40 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.

இந்த ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு, மூன்று மாதம் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, புதிய ரேஷன் கடை கட்டடத்தை, விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'காட்டுக்கொல்லை பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் மின் இணைப்பு வழங்கும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. விரைவில் மின் இணைப்பு வழங்கப்பட்டு, கட்டடம் பயன்பாட்டுக்கு வர உள்ளது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us