/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகம் கட்ட அடிக்கல்மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகம் கட்ட அடிக்கல்
மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகம் கட்ட அடிக்கல்
மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகம் கட்ட அடிக்கல்
மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகம் கட்ட அடிக்கல்
ADDED : ஜன 24, 2024 10:37 PM
வாலாஜாபாத்:சென்னை தேனாம்பேட்டை பகுதியில், காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மருந்து மொத்த வினியோகிஸ்தர்கள் மற்றும் மருந்து கடை உரிமையாளர்கள் தங்களின் உரிமங்களை புதுப்பிக்கவும், மருந்து தொடர்பான புகார்கள் தெரிவிக்கவும், சென்னை அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
இதனால், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில், புதிதாக மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். அக்கோரிக்கையை ஏற்று, வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு பகுதியில், காஞ்சிபுரம் மண்டல மருந்து உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.
மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் கண்ணன், மருந்தக ஆய்வாளர் சுரேஷ், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.