/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு
வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு
வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு
வரதராஜ பெருமாள் கோவிலில் தவன உற்சவம் நிறைவு
ADDED : மார் 18, 2025 12:19 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான தவன உற்சவம் கடந்த 15ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் சக்கரத்தாழ்வார் சன்னிதி பின்புறம் உள்ள தோட்ட உற்சவ மண்டபத்தில் பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
மதியம் 1:30 மணிக்கு திருஞ்சனம், ஆஸ்தானமும், மாலை 5:30 மணிக்குதிருவாராதனம், நிவேதனம், தீர்த்தம், சடாரி, துாப, தீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.
மாலை 6:30 மணிக்கு தோட்டத்தில் இருந்து பெருமாள், தாயார் புறப்பாடும், பத்தி உலாத்தல் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆழ்வார் பிரகாரமாக பெருமாள், தாயார் எழுந்தருளினர். தொடர்ந்து பெருந்தேவி தாயார், சன்னிதிக்கும், பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினர். தவன உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.