Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று தைப்பூச ஜோதி விழா

ADDED : ஜன 24, 2024 10:24 PM


Google News
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழாவையொட்டி, இருமுடி விழா கடந்த ஆண்டு டிச., 1ம் தேதி துவங்கியது.

ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சுயம்பு அன்னைக்கு இருமுடி அபிஷேகத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள், சித்தர் பீடத்திற்கு இருமுடி அணிந்து வந்து, கடந்த டிச., 1ம் தேதியில் இருந்து, தினமும் சுயம்பு அம்மனு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தைப்பூச ஜோதி விழாவையொட்டி, இன்று அதிகாலை 3 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

பின், மாலை 4:30 மணிக்கு, சித்தர் பீடத்தில் இருந்து தைப்பூச ஜோதி ஊர்வலம் புறப்பட்டு, மாலை 6:15 மணிக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குனர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்று, தைப்பூச ஜோதி ஏற்றி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us