Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/டெய்லரை கொன்ற இருவருக்கு 'காப்பு'

டெய்லரை கொன்ற இருவருக்கு 'காப்பு'

டெய்லரை கொன்ற இருவருக்கு 'காப்பு'

டெய்லரை கொன்ற இருவருக்கு 'காப்பு'

ADDED : ஜன 26, 2024 01:04 AM


Google News
குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சி, மணஞ்சேரி, கே.எம்.கே., நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 37. டெய்லர். இவரது வீட்டின் அருகே கார்த்திக் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கண்ணன் குடித்துவிட்டு அடிக்கடி கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி, கண்ணனுக்கும், கார்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து கண்ணனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குன்றத்துார் போலீசார் கார்த்திக், பாலா என இருவரை இந்த வழக்கில் 20ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கண்ணன் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us