Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா

தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா

தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா

தனிஷ்க் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா

ADDED : ஜூன் 11, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், பங்கேற்றவர்கள் இடமிருந்து வலம் - தனிஷ்க் ஜூவல்லரி நிர்வாகி அரசு, நிர்வாக மேலாளர் இக்னேஷியஸ், வணிக பங்குதாரர் சித்ரா சிவகுமார், மேலாளர் ஆனந்த்.

திரு. அரசு, தனிஷ்க் ஜூவல்லரியின் நிர்வாக மேலாளர் திரு. இக்னேஷிஸ், பகுதி வணிகப் பங்குதாரர் திருமதி. சித்ரா சிவகுமார், காஞ்சிபுர தனிஷ்க் ஜுவல்லரி மேலாளர் திரு.ஆனந்த்

காஞ்சிபுரம் தனிஷ்க் ஜூவல்லரியில் தங்க பரிமாற்ற திட்ட அறிமுக விழா இன்று நடைபெற்றது. பகுதி வணிகப் பங்குதாரர் சித்ரா சிவகுமார் தொடங்கிவைத்த இந்த விழா, தனிஷ்க் ஜூவல்லரியின் பகுதி வணிக மேலாளர் திரு.இக்னெசிஸ், திரு. அரசு, திரு. ஆனந்த் ஆகிய நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் நடந்துமுடிந்தது. இந்தப் புதிய திட்டம் குறித்து பேசிய தனிஷ்க் ஜூவல்லரியின் நிர்வாக மேலாளர். இக்னேஷியஸ், ''வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள தனிஷ்க்கை ஆர்வத்துடன் விரும்பி தேர்வு செய்கின்றனர். தங்கம் விலை அதிகரிக்கும் வேளையில், மாறி வரும் தங்க விலைகளுக்கு மத்தியில், தனிஷ்க் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, 'கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி'-யை தனிஷ்க் வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு கழிவே இல்லாமல், பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய வடிவமைப்பு கொண்ட புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இன்றைய நவீன மற்றும் அந்தந்த பிராந்திய வடிவமைப்புகளிலான ஏராளமான நகைகளையும் வழங்குகிறது.

9 காரட் நகையிலிருந்து தொடங்கும் தங்க பரிமாற்றத் திட்டத்தில், பழைய தங்க நகையை கொடுத்து விட்டு, புதிய தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த தங்கத்தின் மதிப்பிலிருந்து 1 காரட் கூடுதலாகவும், வைரத்தில் 2 காரட் கூடுதலாகவும் வழங்கும் சலுகைத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தனிஷ்க் நிறுவனத்தில் இன்று முதல் இந்த மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழைய தங்க நகையை கொடுத்து புதிய தங்க நகை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருகைதருகின்றனர். என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us