காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளராக இருந்த ஸ்ரீதர், திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.வி.நகர விரிவுரையாளராக இடமாறுதலில் சென்றார்.
இவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்ட சத்துணவு பிரிவு நேர்முக உதவியாளராக பணிபுரிந்த ஆர்.ஸ்ரீதர் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு, ஊரக வளர்ச்சி பிரிவு தலைமை மேலாளர் பொறுப்பு ஸ்ரீநிவாசன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.