Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி கோவில் பணியாளருக்கு சீருடை வழங்கல்

காஞ்சி கோவில் பணியாளருக்கு சீருடை வழங்கல்

காஞ்சி கோவில் பணியாளருக்கு சீருடை வழங்கல்

காஞ்சி கோவில் பணியாளருக்கு சீருடை வழங்கல்

ADDED : ஜன 11, 2024 01:13 AM


Google News
குன்றத்துார்:பொங்கல் விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகளுக்கு, ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் சீருடைகள் வழங்கும் விழா குன்றத்துார் முருகன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட அறநிலைய துறை இணை ஆணையர் வான்மதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று சீருடைகளை வழங்கினார்.

இதில், குன்றத்துார் முருகன் கோவில் அறங்காவளர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us