Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

ADDED : மார் 17, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, பொய்யாகுளம் நேதாஜி நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பிரதான சாலை வழியாக உப்புகுளம் பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக, ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், அங்குள்ள சாலையில் வழிந்தோடி வருகிறது.

இதனால், அப்பகுதியில் வசிப்போர் மட்டுமின்றி, இவ்வழியாக செல்வோர் கழிவுநீரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால், கழிவுநீர் தெளிப்பதால் நடந்து செல்வோர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், பொய்யாகுளம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில், அடிக்கபடி அடைப்பு ஏற்படுவதால், பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us