Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ADDED : ஜூன் 17, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, ஜவஹர்லால் நேரு காய்கறி மார்க்கெட் அருகில், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், ஜவஹர்லால் நேரு காய்கறி மார்க்கெட், பட்டு ஜவுளி, உணவகம், நகை, பல சரக்கு மளிகை என, பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையில், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில், துர்நாற்றத்துடன் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

இதனால், இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மட்டுமின்றி, இங்குள்ள கடைகளுக்கு செல்வோரும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

ஒரு வாரமாக வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, செங்கழுநீரோடை வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us