/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம் சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்
சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்
சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்
சுவரில் வளர்ந்துள்ள அரச செடியால் வலுவிழக்கும் பள்ளி கட்டடம்
ADDED : செப் 02, 2025 01:18 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தர்கா முஸ்லிம் மாநகராட்சி பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடியால் கட்டடம் வலுவிழந்து வருகிறது.
காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், தர்கா முஸ்லிம் மாநகராட்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கட்டட சுவரில் அரச மர செடி வளர்ந்துள்ளது. இதனால், சன்ஷைடு பகுதியில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பெயர்ந்து வருகிறது.
எனவே, பள்ளி சுவரில் வளர்ந்துள்ள அரச மர செடியை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.