Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பண்ருட்டிகண்டிகையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பண்ருட்டிகண்டிகையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பண்ருட்டிகண்டிகையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பண்ருட்டிகண்டிகையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

ADDED : ஜூன் 02, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகை சந்திப்பில் பிரிந்து, பனையூர், எழிச்சூர் வழியாக பாலுார் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலை வழியே, ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் எராளமானவோர் தினமும் சென்று வருகின்றனர். தவிர, எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணியர், நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக சென்று செல்கின்றனர்.

அதேபோல, பனையூர், எழுச்சூர் பகுதிமக்கள், பள்ளி - கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட ஏராளமானோர், ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், பண்ருட்டி கண்டிகை சந்திப்பில், சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் கர்ப்பிணியர், நோயாளிகள் என, அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, பண்ருட்டி கண்டிகை சந்திப்பில், பல்லாங்குழியான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us