Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உடைந்த கம்பத்தால் விபத்து அபாயம்

உடைந்த கம்பத்தால் விபத்து அபாயம்

உடைந்த கம்பத்தால் விபத்து அபாயம்

உடைந்த கம்பத்தால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 02, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ரயில் மேம்பால மைய தடுப்பில், மின் விளக்குகள் ஒளிராததால், வாகன ஓட்டிகள் இடையே விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில், கடவு எண் 29, பொன்னேரிக்கரையில், 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கபட்டு, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டிற்கு உள்ளது.

மேம்பாலம் மைய தடுப்பில் மின் கம்பங்கள்அமைக்கப்பட்டு உள்ளன. இதில், காஞ்சிபுரம் மீன் மார்க்கெட் அருகே, ஒரு இரும்பு மின் கம்பம் உடைந்து, மைய தடுப்பு நடுவே சாய்த்து வைக்கப்பட்டு உள்ளது. உடைந்த கம்பத்தை மற்றொரு கம்பத்தில் கட்டவும் இல்லை.

இதனால், அந்த மேம்பாலம் வழியாக சைக்கிளில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலத்தின் மைய தடுப்பில் சாய்த்து வைக்கப்பட்ட கம்பத்தை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us