Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கூரத்தாழ்வான் தேரோட்டம் விமரிசை

கூரத்தாழ்வான் தேரோட்டம் விமரிசை

கூரத்தாழ்வான் தேரோட்டம் விமரிசை

கூரத்தாழ்வான் தேரோட்டம் விமரிசை

ADDED : ஜன 30, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 1,014வது திருவவதார மகோற்சவம், கடந்த 22ல் திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடுடன் துவங்கியது. தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களில் உலா வந்தார்.

ஒன்பதாவது நாள் உற்சவமான நேற்று காலை, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. தேரில், மலர் அலங்காரத்தில் கூரத்தாழ்வான் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

தேரை, கூரம் கிராமத்தினர் வடம் பிடித்து, கோவிந்தா என, கோஷம் எழுப்பி இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us