/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செடிகள் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை செடிகள் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
செடிகள் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
செடிகள் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
செடிகள் வளர்ந்துள்ள கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2025 01:49 AM

காஞ்சிபுரம்,:கீழ்கதிர்பூர் ஊராட்சி, சாரல் நகரில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சி, சாரல் நகர் வழியாக மழைநீர் செல்லும் வடிகால்வாய் உள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, மழைநீர் செல்லும் கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கீழ்கதிர்பூர் சாரல் நகரில் உள்ள மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.