Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்க கோரிக்கை

பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்க கோரிக்கை

பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்க கோரிக்கை

பராமரிப்பில்லாத பூங்கா சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜூலை 02, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 43வது வார்டு, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகரில், 2021-22ம் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட கலைஞர் நுாற்றாண்டு பூங்கா, இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.

இப்பூங்காவில் சிமென்ட் கல் பதித்த நடையிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, ஓய்வு எடுக்க மண்டபம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அழகிய மலர் செடிகள், பச்சைபசேல் புல்தரை, அமர்வதற்கான இருக்கை, இரவில் ஒளிரும் மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முறையான பராமரிப்பு இல்லாததால், சிமென்ட் கல் நடைபாதையிலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியிலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால் கருகி உள்ளன. ஓய்வு மண்டபத்தின் படிகள் சேதமடைந்து உடைந்துள்ளது. இதனால், பூங்காவை பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா, பராமரிப்பு இல்லாமல் வீணாகி வருகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து முறையாக பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us