Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை

 இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை

 இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை

 இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அங்கன்வாடி மையம் கட்ட கோரிக்கை

ADDED : டிச 01, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்: மருத்துவன்பாடியில், இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ள, அங்கன்வாடி மையத்தை மீண்டும் கட்ட, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு, 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்தது.

மழை நேரங்களில் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகி வந்தது. எனவே, அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்ற பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, ஊராட்சி நிர்வாகத்தினர் இரண்டு ஆண்டுக்கு முன், கட்டடத்தை இடித்து அகற்றினர். தற்போது, அங்கன்வாடி மையம் மகளிர் சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு, போதிய இடம் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளது. குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாக இடிக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டாததால், அங்கு பல்வேறு செடிகள் வளர்ந்து வருகின்றன.

எனவே, மருத்துவன்பாடி ஆதிதிராவிடர் குடியிருப்பில், இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டாக கட்டாமல் உள்ள, அங்கன்வாடி மையத்தை மீண்டும் கட் ட, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us