Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை

ADDED : ஜூன் 20, 2025 07:32 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கே.எம்.அவென்யூவிற்கு செல்லும் பிரதான சாலையில், தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 29வது வார்டு, கே.எம்.அவென்யூ மற்றும் விரிவு பகுதி மற்றும் ஸ்ரீரங்கராஜ வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சின்ன காஞ்சிபுரம் வேகவதி தெருவில் இருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலையில், மின்கம்பங்கள் இல்லாதததால், விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இருளை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள காலி இடங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது, சூதாட்டம் ஆடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லுாரி மாணவியரும், பணிமுடிந்து வீடு திரும்பும் பெண்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, வேகவதி தெருவில் இருந்து கே.எம்., அவென்யூவிற்கு செல்லும் பிரதான சாலையில், புதிதாக மின் கம்பங்கள் அமைத்து, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த மாநகராட்சியும், மின்வாரியத்தினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us