Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சோமங்கலம் ஏரி மதகு சீரமைக்க கோரிக்கை

சோமங்கலம் ஏரி மதகு சீரமைக்க கோரிக்கை

சோமங்கலம் ஏரி மதகு சீரமைக்க கோரிக்கை

சோமங்கலம் ஏரி மதகு சீரமைக்க கோரிக்கை

ADDED : ஜன 30, 2024 09:53 PM


Google News
Latest Tamil News
குன்றத்துார்:குன்றத்துார் தாலுகா, சோமங்கலம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நான்கு மதகுகள் உள்ளன.

இந்த ஏரி நீரை பயன்படுத்தி அப்பகுதியில் 400 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரியின் இரண்டு மதகுகள் சேதமாகியுள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

சோமங்கலம் பெரிய ஏரியின் 1 மற்றும் 3ம் எண் மதகுகள், 5 ஆண்டுகளுக்கு முன் சேதமாகின. ஆனால், இதுவரை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், ௨௪ மணி நேரமும்மதகு வழியே ஏரிநீர் வெளியேறி வருகிறது.

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது, 1ம் என் மதகு சேதமாகி கரை உடையும் நிலை ஏற்பட்டது. மண் மூட்டைகள் வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனவே, கலங்கல் பகுதியை கூடுதலாக ஒரு அடி உயர்த்தி கட்டி, மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us